/* */

தீபாவளி திருவிழா: அலைமோதும் மக்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடை பட்டாசுகள் வாங்க காலை முதலே அலைமோதும் மக்கள் கூட்டம்

HIGHLIGHTS

தீபாவளி திருவிழா: அலைமோதும் மக்கள் கூட்டம்
X

விழுப்புரம் நகரத்தில் உள்ள கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் கொண்டாடும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன் கூட்டியே தயாராகி கடந்த சில நாட்களாக புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளுக்கு திரண்டு சென்று வந்தனர்.

கடந்த இரு நாட்களாக புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 7 மணி முதலே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழுப்புரம் நகரை பொறுத்தவரை ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் நிறைந்த நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை, திருச்சி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

இவ்வாறு கடைவீதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வந்த பொதுமக்களால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் நேற்று காலை முதல் இன்று வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலில் சிக்கி வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றதை காண முடிந்தது.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட நேரிடும் என்பதால் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் முற்றிலும் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் கூட்டத்தை கண்காணிக்கும் வகையிலும் விழுப்புரம் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான வீரவாழியம்மன் கோவில், பழைய பேருந்து நிலையம், காமராஜர் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார், கண்காணிப்பு உயர்கோபுரங்களை அமைத்து அதிலிருந்தபடியே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல் திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம் உள்பட மாவட்டம் முழுவதும் இரு நாட்களாக கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் 31 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் சுமார் 1 ஆயிரத்து 400 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Updated On: 24 Oct 2022 6:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்