/* */

குற்ற இடங்களில் கேமிரா பொருத்த எஸ்பி அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்கள் நடக்கும் இடங்களில் கேமிரா பொருத்த வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்

HIGHLIGHTS

குற்ற இடங்களில் கேமிரா பொருத்த எஸ்பி அறிவுரை
X

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா  தலைமையில் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக குற்றங்கள் நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா போலீசாருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமை வகித்து, நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்ததோடு அதனை விரைந்து முடிக்கும்படி ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பேசுகையில் தீவிர ரோந்துப்பணி விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும். அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

அதிகளவில் குற்றங்கள் நடைபெறுவதாக கண்டறியப்படும் இடங்களில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் பராமரித்து கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக் கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பாலியல் சம்பந்தமான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். வாகன சோதனை மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தல், சாராய விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடியிசத்தில்ல் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு வாகனங்கள் ஆகியவற்றின் பராமரிப்புத்தன்மை குறித்து காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தேவராஜ், கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பார்த்திபன், உமாசங்கர், மித்ரன், சிங்காரவேலன், சுரேஷ்பாண்டியன், சம்பத்குமார், பிரியதர்ஷினி, குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 9 March 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்