/* */

விழுப்புரத்தில் காவல்துறையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில், காவல்துறையினரை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் காவல்துறையை கண்டித்து  மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள். 

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.முருகன் தலைமை தாங்கினார், சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபகரன் உயிரிழப்பில், சம்பந்தபட்ட காவல் துறையை சேர்ந்த காவல் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி உரிய இழப்பிடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பி.உமா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெ.ஜெயக்குமார், எம்.கே.முருகன், மாவட்ட தலைவர் பாவாடைராயன், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், பாக்கியராஜ், இளங்கோவன் உட்பட 100 க்கும் மேற்பட்டோர், கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 21 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்