/* */

கழிவுநீரை அகற்றி தார்சாலை அமைக்க கோரிக்கை

விழுப்புரம் கணேஷ் நகரில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றி உடனடியாக தார்சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

கழிவுநீரை அகற்றி தார்சாலை அமைக்க கோரிக்கை
X

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்த கணேஷ் நகர் குடியிருப்போர்

விழுப்புரம் நகராட்சி பகுதியை சேர்ந்த கணேஷ் நகர் 4,வது குறுக்கு தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். விழுப்புரம் நகராட்சிக்கு அனைத்து வரிகளையும் கட்டி வந்தாலும், அப்பகுதி தெருவில் எந்த அடிப்படை வசதிகளையும், நகராட்சி செய்து தரவில்லை,

தார் சாலை அமைத்து தரக்கோரி வேண்டி நகராட்சி ஆணையருக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, இப்பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும். பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டி மூடாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் கழிவு நீர்,மழைநீர் தேங்கி உள்ளதை உடனடியாக சரி செய்து தார்சாலை அமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Updated On: 23 Nov 2021 2:16 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...