/* */

விழுப்புரம் கோட்ட அளவில் மின் நுகர்வோர்கள் குறைகேட்பு கூட்டம் அறிவிப்பு

விழுப்புரம் கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கவுள்ளதாக மேற்பார்வை பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

விழுப்புரம் கோட்ட அளவில் மின் நுகர்வோர்கள் குறைகேட்பு கூட்டம் அறிவிப்பு
X

விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் நடக்கிறது.

மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கோட்ட அளவில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கும், கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும், செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும், திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

மின் நுகர்வோர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 April 2023 10:24 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?