Begin typing your search above and press return to search.
விக்கிரவாண்டி அருகே மின் கசிவால் ஏர்டெல் டவரில் தீ விபத்து
விழுப்புரம் அருகே, விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அகரம் மற்றும் சிந்தாமணி கிராமங்களுக்கு இடையே உள்ள இரயில் பாதை அருகே அமைந்துள்ள தனியார் ஏர்டெல் டவர் நேற்று இரவு தீடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் திடீர் காற்று வீசியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.