விழுப்புரத்தில் பேருந்து பயணிகளிடம் அமைச்சர் தடுப்பூசி விழிப்புணர்வு

விழுப்புரத்தில் பேருந்து பயணிகளிடம் அமைச்சர் தடுப்பூசி விழிப்புணர்வு
X

பேருந்தில் ஏறி தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழுப்புரத்தில் திடீரென பேருந்தில் ஏறிய அமைச்சர் மா.சுப்பரமணியன் பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து கூறினார்

விழுப்புரம் மாவட்டத்திற்கு 13 வது தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க வந்திருந்த மாநில சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த பேருந்தில் திடீரென ஏறி பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா என விசாரித்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அப்போது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர்.கௌதமசிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future