/* */

உயிர் பலி கேட்கும் தேசிய நெடுஞ்சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம் அருகே உயிர்ப்பலி கேட்கும் தேசிய நெடுஞ்சாலை சம்பந்தப்பட்ட துறை உடனடியாக சீரமைக்கப்படுமா பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

HIGHLIGHTS

உயிர் பலி கேட்கும் தேசிய நெடுஞ்சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

உயிர் சேதம் கேட்கும் சாலை தடுப்புச்சுவர்

விழுப்புரத்தில் சாலை தடுப்பு சுவர் சேதமடைந்து உள்ளதால் உயிர்பலி வாங்க காத்திருப்பதால், விபரீதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோாிக்கை எழுந்து வருகிறது.

விழுப்புரத்தில் விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக கருதப்படுகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டு ரோடு வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சாலையின் நடுவே தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம் அருகே சாலைஅகரம் பெட்ரோல் நிலையம் அருகில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நள்ளிரவில் லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியதில் அந்த தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்தது, அதிலுள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இதை சரிசெய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியத்துடன் இருப்பதால் அடிக்கடி சாலைஅகரம் பகுதியில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் எச்சரிக்கை பிரதிபலிப்பான்கள் இல்லாததால் இரவு நேரங்களில் சாலை விபத்துகள் நடப்பது தொடர் கதையாக மாறி உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டு ரோடு வரை எச்சரிக்கை பிரதிபலிப்பான்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும்போது ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

சாலைஅகரம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். இதுபோன்று தொடர் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க எச்சரிக்கை பிரதிபலிப்பான்களை பொருத்த மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோலியனூர் அருகே சாலைஅகரம் பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து ஓராண்டாக இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கிறது, அதனால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி வாங்க காத்திருப்பதாஙவே உள்ளது, ஏதேனும் விபத்து ஏற்பட்டு விபரீதம் நடந்தால்தான் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த அந்த தடுப்புச்சுவரை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் சாலைஅகரம் கிராமம் தொடங்கும் இடத்தில் ஆபத்தான வளைவு இருக்கிறது. அந்த வளைவில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதால் அதனை தடுக்கும் வகையில் உடனடியாக அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Oct 2022 11:17 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு