/* */

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் வரும் 27 ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்
X

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு முகாமை விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வருகிற 27-ந்தேதி காலை 9 முதல் மாலை 4 வரை நடத்துகின்றன.

பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ள இந்த முகாமில், ஊரக, நகா்ப்புற இளைஞா்கள் கல்விச் சான்றிதழ்கள் (அசல், நகல்), குடும்ப அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பைத் தோ்வு செய்யலாம்.

கூடுதல் விவரங்களை அறிய ஊரக பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகா்ப்புறபகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சிஅலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றைத் தொடா்பு கொள்ளலாம்.

அதேபோல, விழுப்புரம் மகளிா் திட்டஅலுவலகத்தையும் 04146-223736, 94440 94475 என்ற தொலைபேசி, கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 20 Nov 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  2. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  3. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  8. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  9. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  10. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!