/* */

ஏரி,குளங்களில் தனிநபர் ஏலம், கலெக்டர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஏரி மற்றும் குளங்களில் தனி நபருக்கு மீன் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்

HIGHLIGHTS

ஏரி,குளங்களில் தனிநபர் ஏலம், கலெக்டர் எச்சரிக்கை
X

விழுப்புரம் கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு சொந்தமான ஏரி,குளங்களை பொது ஏலம் விடுவோர் மற்றும் மீன் குத்தகை விடுவோர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு,ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் பாசன ஏரிகள்,குளங்கள் மற்றும் இதர சிறு பாசன குட்டைகள் உள்ளன.

இந்த நீர்நிலைகள் ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை,ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்பட்டு அரசிற்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்,தமிழக அரசு துறைக்கு சொந்தமான நீர் நிலைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது அவர்களை சார்ந்த தனி நபர்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளுக்கு மாறாக எவ்வித அலுவலக நடைமுறைகளையும் பின்பற்றாமல் சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொது ஏலம் விடும் நடைமுறை சில கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

சட்டத்திற்கு புறம்பான பொது ஏலம் விடுபவர் மற்றும் மீன் பிடிப்பவர் மீது அபராதம் விதிக்கப்பட்டு மீன்கள்,வலைகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது