/* */

விழுப்புரத்தில் குட்கா பதுக்கல்: வியாபாரி தப்பி ஓட்டம்

Gutka - விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

Gutka | Villupuram News
X

கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களுடன் போலீசார்.

Gutka -விழுப்புரம் அருகே சாலைஅகரத்தில் இருந்து ராகவன்பேட்டை செல்லும் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பாக்கெட், பாக்கெட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை கைப்பற்றி எடை போட்டதில் 196 கிலோ இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த புகையிலை பொருட்களை விழுப்புரம் பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவர் பெங்களூருவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விழுப்புரம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும், இதற்காக அவர் ரூ.1,500-க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை குடோனாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அப்பாசை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோன்று விராட்டி குப்பம் பகுதியில் காலி மனையில் இருந்த ஒரு சிறிய கழிவறையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த நபர் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Sep 2022 7:20 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்