/* */

குறை கேட்பை குறை தீர்ப்பு தினமாக்குக: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

Disabled People- விழுப்புரத்தில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு தினத்தை, குறை தீர்ப்பு தினமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

குறை கேட்பை குறை தீர்ப்பு தினமாக்குக: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
X

பைல் படம்.

விழுப்புரத்தில் வருகின்ற 6 ந்தேதி நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு தினத்தை, குறை தீர்ப்பு தினமாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட குழு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலருக்கு கோரிக்கை வைத்துள்ளனர், அதில் வருகின்ற 06.06.2022. நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு தினத்தை குறை தீர்ப்பு தினமாக நடத்த்திட வேண்டுகிறோம்.அங்கு மனுக்கள் வரிசைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகளை சங்க பிரதிநிதிகள் பேச வாய்ப்பளிக்க வேண்டும், கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கட்டாயம் பங்கேற்க வேண்டும், மேலும் வருவாய் துறை, காவல் துறை, அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் பங்கேற்க செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழக அரசின் ஆணையின் படி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு தினத்தை மாவட்ட ஆட்சியர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பலமுறை முன்வைத்துள்ளோம். அதனை நிறைவேற்றும் வகையில் 6.7.2022ல் குறைதீர்ப்பு தினத்தை நடத்துவதாக அறிவித்துள்தற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டத்தில் 21வகை ஊனங்களை ஆய்வு செய்ய தகுதியான மருத்துவர்கள், . ஊரக-உள்ளாட்சி அதிகரிகள் ஆகியோர் பங்கேற்க செய்ய வேண்டும். மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் சங்க அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க அழைக்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவைகள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்படவேண்டும். குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ள இடமாகவும் , மாற்றுத்திறனாளிகள் எளிதில் கலந்து கொள்ளும் இடமாகவும் கூட்டம் நடைபெறும் இடம் இருக்க வேண்டும் என அதில் கேட்டு கொண்டு உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 July 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை