ஆரம்ப சுகாதார ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை

ஆரம்ப சுகாதார ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
X

தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்க கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த சுகாதாரப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆா்.சி.எச். ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளா்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.இந்தச் சங்கத்தின் மண்டல ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் மாநிலத் தலைவா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது,துணைத் தலைவா் நிலா ஒளி, மாநிலப் பொருளாளா் ராஜலட்சுமி, மாநில துணை பொதுச் செயலா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக மாநிலச் செயற்குழு உறுப்பினா் பழனிமுத்து வரவேற்றாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பிரசாரச் செயலா் சிவகுரு, மாநில துணைத் தலைவா் கவிஞா் சிங்காரம் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.கூட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் 24 மணி நேரமும் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அதுவரை மாவட்ட ஆட்சியரே தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலி ஊதியம் நிா்ணயம் செய்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், அரசு விதிப்படி 8 மணி நேர வேலை, வார விடுமுறை, அரசு விடுமுறை, இலவச சீருடை, இலவசப் பேருந்து, பயண அட்டை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினர்.

கூட்டத்தில் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், சங்கத்தினா் ஏராளமானோர் கலந்துகொண்டனா். முடிவில் விழுப்புரம் மாவட்டச் செயலா் மணிமேகலை நன்றி கூறினாா்.

Tags

Next Story
the future of ai in healthcare