விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
X
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை 46,921 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் இறக்கவில்லை; இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இன்று வியாழன்கிழமை மட்டும் 33 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,881 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 682 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future