Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 511 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஐம்பது ஆயிரத்தை நெருங்குகிறது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை 511 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை, 49,322 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுவரை 361 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
மாவட்டத்தில், இன்று சனிக்கிழமை மட்டும் 243 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 47,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1961 பேர், மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.