/* */

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் குளங்கள் வெட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அமிர்த சரோவர், ஜல்சக்தி அபியான் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல், குளம், குட்டைகளை சீரமைத்தல், ஆழ்துளை கிணறுகளை சரிபார்த்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். தாழ்வான பகுதியை தேர்வு செய்து புதிய குளங்களை அமைப்பதன் மூலம் அதிகளவில் நீரை விரைவில் சேகரித்து வைத்திட முடியும் என்பதால் தாழ்வான பகுதிகளாக தேர்ந்தெடுத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 8 குளங்கள் என 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 104 குளங்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உரிய இடங்களை தேர்வு செய்து குளங்கள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு புதிய குளங்களை உருவாக்க முடியாத சூழ்நிலை இருப்பின் அப்பகுதியில் முறையாக பராமரிக்கப்படாத குளங்களை கண்டறிந்து அவற்றை சீரமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் வெண்ணிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Jun 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்