/* */

விழுப்புரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரத்தில் நடைபெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு
X

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாடு சனிக்கிழமை விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது, கூட்டத்திற்கு கோட்ட தலைவர்ஆர்.அருள் தலைமை வகித்தார். கோட்ட துணைத்தலைவர் இ.குணசேகர் செங்கொடியை ஏற்றி வைத்தார், முன்னதாக கோட்டசெயற்குழு உறுப்பினர் வி.கே.ஏழுமலை வரவேற்று பேசினார்.

மாநாட்டில் மாநில துணைப் பொதுச்செயலாளர் டி.பழனிவேல் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்கவுரையாற்றினார்,தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன்,ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் எம்.புருஷோத்தமன், திட்ட செயலாளர் ஆர்.சேகர், திட்ட இணைச்செயலாளர் பி.சிவசங்கரன்,டிஎன்பிஇஒ திட்ட செயலாளர் எஸ்.அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி நிறைவுரை ஆற்றினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும்,. 01-12-2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை சிஎல்ஆர் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ,பி.இ படித்தவர்களைக்கொண்டு நிரப்ப வேண்டும்,புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380-ஐ வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். மேலும் படிப்படியாக நிரந்தரப்படுத்திடவேண்டும், விஸ்தரிப்பு பணிகளை கே2 அக்ரிமெண்ட் மூலம் பணிசெய்திட வேண்டும். பகுதிநேர ஊழியர்களை நிரந்தரம் படுத்திட வேண்டும். விஸ்தரிப்பு பணி செய்வதற்கு அனைத்து தளவாட சாமான்களையும், தரமாக வழங்க வேண்டும்.பிரிவுகளில் பழுதடைந்த கணினி, பிரிண்டர், உள்ளிட்ட சாதனங்களை மாற்றி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

பின்னர் விழுப்புரம் வினியோக கோட்ட சிறப்பு தலைவராக வி.வெங்கடகிருஷ்ணன், தலைவராக இ‌.முத்துக்குமரன், செயலாளராக ஆர்.அருள், துணைத் தலைவர்களாக ராஜேந்திரன், இ.குணசேகரன், இணை செயலாளர்களாக சத்தியசீலன், கே.ராஜேந்திரனும், விழுப்புரம் கோட்ட தலைவராக ஆர்.சங்கர், செயலாளராக கருணாநிதி, துணைத்தலைவராக ஆர்.பலராமன், இணைச் செயலாளராக பி.விஜயா ஆகியோர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் கோட்ட செயற்குழு உறுப்பினர் டி.பார்த்திபன் நன்றி கூறினார்.

Updated On: 12 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  2. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  3. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  4. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  5. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  6. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  9. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  10. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...