/* */

விழுப்புரம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X

பைல் படம். 

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியைச் சோ்ந்த உசேன் மகன் அபுபக்கா்சித்திக் (20). இவா், விழுப்புரத்தை அடுத்த அரசூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தாா். இவர் நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பிடாகம் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அபுபக்கா்சித்திக் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்த அபுபக்கா் சித்திக்கை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On: 3 Sep 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது