இன்னுயிர் காப்போம் திட்டம்: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கலெக்டர்

இன்னுயிர் காப்போம் திட்டம்: முதலமைச்சருக்கு  நன்றி தெரிவித்த கலெக்டர்
X

முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் 13 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கியதற்கு கலெக்டர் மோகன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (18.12.2021) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், "இன்னுயிர் காப்போம்" எனும் "நம்மை காக்கும் - 48" திட்டத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட 13 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தை தொடங்கி வைத்தற்கு மாவட்ட கலெக்டர் த.மோகன் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai in future agriculture