மழையால் சேதமான தரைப்பாலம் சீரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு

மழையால்  சேதமான தரைப்பாலம் சீரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு
X

பாலம் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், சின்ன செவலை முதல் மழவராயர் நல்லூர் செல்லும் சாலையில் வடகிழக்கு பருவமழையின் போது பெய்த மழையால் சேதமடைந்த தரைப்பாலம், தற்போது தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?