/* */

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் சுதந்திர கொடியை ஏற்றினார்

75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் சுதந்திர கொடியை ஏற்றினார்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட காவல்துறை மைதானத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார்

விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார், தொடர்ந்து அமைதிக்கான புறாக்களை பறக்கவிட்டு பலூன்களையும் பறக்கவிட்டார், தொடர்ந்து மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து சுதந்திர தின தியாகிகளை பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் மோகன், கூட்டுறவு துறை, வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் துறை, சிறுபான்மை நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 198 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 66 லட்சத்து 85 ஆயிரத்து 465 மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார்.


தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...