/* */

வேலைவாய்ப்பு உதவி தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் மோகன் தகவல் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு உதவி தொகை பெற விண்ணப்பிக்க  கலெக்டர் அழைப்பு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவிக்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் அறிவிப்பு வெளிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், படிந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் 01.01.2022 தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பதிவினைத்தொடர்ந்து புதுப்பித்து 31.12.2021 அன்றைய நிலையில் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் ஓராண்டு வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், அலுவலகத்தில் பதிவுசெய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனானி இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும், மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.03.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச்சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். அரசாணை (நிலை) எண்:127 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(ஆர்2) துறை, நாள்:25.07.2019 வாயிலாக இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/- மேல்நிலை கல்விதேர்ச்சிக்கு ரூ.400/ பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோவ்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.650/- மேல்நிலை கல்விதேர்ச்சிக்கு ரூ.700/- பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/-என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பப்படிவங்கள் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள், மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்துசெய்யப்படமாட்டாது.

மேலும், 01.01.2022 உடன் தொடங்கும் காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2022 பிப்ரவரி 28-ம் தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...