/* */

கொரோனா தடுப்பு மையத்தில் கலெக்டர் நேரடி ஆய்வு

கொரோனா தடுப்பு மையத்தில் கலெக்டர் நேரடி ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் விழுப்புரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு இயங்கிய பழைய கொரோனா சிகிச்சை மையத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தனிமை சிகிச்சை மையங்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அங்கு பயன்படுத்தப்பட்ட படுக்கைகளை மாற்றி புதிய படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை கூறினார். ஆய்வின்போது. கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 12 April 2021 12:00 PM GMT

Related News