/* */

தீயால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்

கோலியனூர் ஒன்றியம் இளங்காடு பகுதியில் தீயால் வீடிழந்த பழங்குடி இருளர் இன மக்களுக்கு கோட்டாட்சியர் இன்று ஜாதி சான்றிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

தீயால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்
X

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்காடு கிராமத்தில் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த சுப்புராயன் (வயது 59), செங்கேணி மனைவி செல்வி (38), கண்ணப்பன் (60), சந்திரன் (28), ஜெயக்குமார் (30), பிரகாஷ் (37), சிவராஜ் மனைவி சுமதி (60), முருகவேல் மனைவி ராதா (38) உள்ளிட்ட 14 குடும்பத்தினர் அங்கு சாலையோரமாக உள்ள இடத்தில் 8 குடிசை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை சுப்புராயனின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென எரிந்த தீ அருகில் இருந்த மற்ற 7 குடிசைகளுக்கும் பரவியது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 8 குடிசை வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

இதில் வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். லட்சுமணன் இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மோகன் இளங்காடு கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர்களுக்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அங்கு உள்ள பழங்குடி இருளர்களுக்கு உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் நேரில் சென்று சாதி சான்றிதழ் மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.

Updated On: 9 Aug 2022 4:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு