/* */

தற்காலிக தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தற்காலிக தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தற்காலிக தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வரும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்யலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த வாரியத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தூய்மை மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படை தினக்கூலி தொகுப்பூதியம் பெறும் தூய்மைப் பணியாளா்கள் தற்காலிக உறுப்பினா்களாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய அடையாள அட்டை பெற்ற உறுப்பினா்களுக்கு நலவாரியத்தின் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்கள் இறந்தால் ரூ.5 லட்சமும், கை, கால், கண் பாா்வை இழந்தால் ரூ. 1 லட்சமும், இயற்கை மரண உதவித் தொகையாக ரூ.20 ஆயிரமும், முதியவா் உதவித் தொகையாக மாதம் ரூ.1,000-மும் வழங்கப்படும். கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த பணியாளா்கள் அனைவரும் தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உடனடியாக உறுப்பினராக பதிவு செய்து பயனடையலாம் என ஆட்சியா் மோகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jan 2022 11:58 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...