/* */

உயிர் காத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுக்கு அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உயிர்களை காப்பாற்றிய இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

உயிர் காத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுக்கு அழைப்பு
X

மாவட்ட ஆட்சியர் மோகன்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானமிக்க பணிகளை செய்த, உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களை காத்த நபர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா, உத்தம் ஜீவன் ரக்‌ஷா மற்றும் ஜீவன் ரக்‌ஷா பதக் ஆகிய தொடர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானமிக்க பணிகளை தாமதமின்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவர்கள், நிலச்சரிவு, விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயமடைந்தவர்கள், மின் விபத்துகளில் சிக்கியவர்கள், விலங்கினால் தாக்கப்படுபவர்கள் மற்றும் சுரங்க விபத்துக்களில் சிக்கியவர்கள் ஆகியோரை உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.

வீர சேவைபுரிந்தவர்களை கவுரவிக்கும் விதத்திலும், இவர்களைப்போல் மற்றவர்களும் ஆபத்துக்காலத்தில் உதவிகள் புரிவதை ஊக்குவிக்கும் விதத்திலும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கள், ஆபத்துக்காலங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற தருணங்களில் மனித உயிர்களை காத்து விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் ஆயுதப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணி சேவைத்துறையினர் ஆகியோர் தம்முடைய பணி நேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Updated On: 21 July 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...