/* */

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதாத்தில், அரசு பள்ளிகளில், குழந்தைகள் சேர்க்கைக்கான பெற்றோர்கள் ஆர்வம் காட்டிடுவதற்கான 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், தலைமை தாங்கி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடப்பாண்டில் அதிகளவு மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தற்பொழுது அரசு பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை வேலையிலும் சிற்றுண்டி வழங்கப்படும். அரசு பள்ளியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு 20 சதவீதம் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேபோல், பெண் கல்வி இடை நிற்றலை தடுக்க அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

இதுபோல் எண்ணற்ற திட்டங்களை அரசு வழங்கி வருகின்றன. பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து அரசு திட்டங்களை பெற்று பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைத்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா,மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் முனைவர் மா.பாபுசெல்வதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Jun 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு