விழுப்புரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் பி.கலியமூர்த்தி, எஸ்.அபிமன்னன், மாவட்ட துணைத்தலைவர் என்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, கரும்பு வெட்டும் தொழிலாளர் சம்மேளன தலைவர் என்.பழனி, மாவட்ட பொருளாளர் கே.உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கவேண்டும், இதுவரை வேலை செய்த ஐந்து வார சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக்கி தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் எம்.சேகர், வி.சுந்தரமூர்த்தி, ஆர்.மகேந்திரன், ராஜி, பஞ்சம்மாள், வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டடித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்,பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu