/* */

விழுப்புரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

விழுப்புரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
X

விழுப்புரம் காவல் நிலையம் பைல் படம்.

விழுப்புரம் நகராட்சி வி.மருதூர் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள தனது மருமகன் பிரகாஷ் (27) என்பவருடைய வீட்டில் சம்பவத்தன்று இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் திவாகர் (23) என்பவர் குடிபோதையில் அங்கு வந்து, யார் இங்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தியது, நான் பெரிய ரவுடி என்றும் என்னை கேட்காமல் எதுவும் நடக்கக்கூடாது என்றும் திட்டிக்கொண்டிருந்தார்.

மேலும் அவர் பிரகாஷின் வீட்டு கதவை கல்லால் அடிக்கும்போது அவரது மாமனார் விநாயகத்தின் தலையில் தாக்கியது. இதை தட்டிக்கேட்ட விநாயகத்தை திவாகர் கத்தியை காட்டி கொலை பண்ணி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பிரகாஷ், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திவாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Aug 2022 2:01 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!