/* */

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்:ஒருவர் கைது

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு அரசுப் பேருந்தில்10 கிலோ கஞ்சா கடத்திய நபர் விழுப்புரம் பறக்கும் படை மேற்கொண்ட வாகன சோதனையில் பிடிபட்டார்.

HIGHLIGHTS

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்:ஒருவர் கைது
X


விழுப்புரம் செஞ்சி சாலையில் பூத்தமேடு என்ற இடத்தில் 5 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அரசு பேருந்தின் உள்ளே 42 வயது மதிக்கத்தக்க கேரளாவைச் சார்ந்த பிரேம் என்ற நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்து இருந்தார். அவரிடம் இரண்டு பார்சல்கள் இருந்தது. சந்தேகத்தின் பேரில் பார்சலை பிரித்து சோதனை செய்தபோது தலா 5 கிலோ வீதம் மொத்தம் 10 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இரண்டு கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்து அந்த வாலிபரை அருகில் இருக்கும் கானை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வாலிபர் பிரேம், திருப்பதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சாவை விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அரசு பேருந்தில் 10 கிலோ அளவிற்கு கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 March 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...