/* */

இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக போராட்டம்

விழுப்புரத்தில் பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்க.ஜோதி தலைமை வகித்தார். பாமக அரசியல் ஆலோசனை குழு தலைவர் தீரன், புதுவை மாநில அமைப்பாளர் முன்னாள் எம்.பி.தன்ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று மாவட்டஆட்சியரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து சென்றனர். ஏராளமான கூட்டம் திரண்டதால் மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

Updated On: 29 Jan 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?