/* */

விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம்: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கல்

Meeting in Tamil -விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டத்தில் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம்: தீ  விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கல்
X

பைல் படம்.

Meeting in Tamilவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல்சலாம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அண்ணாதுரை, துணைத் தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12-வது வார்டுக்குட்பட்ட கீழ்மாட வீதி, இந்துக்கள் சுடுகாட்டில் மினி பவர்பம்ப் அமைக்க அனுமதி அளிப்பது, 7-வது வார்டுக்குட்பட்ட பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மண் பாதையை சாலையாக மாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்துக்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சார்பாக ரூ.15 ஆயிரம் வழங்கினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Aug 2022 6:32 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்