/* */

விழுப்புரம் அருகே மணல் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்

Villupuram Today News- விழுப்புரம் மாவட்டம், கானை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே மணல் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்
X

பைல் படம்.

Villupuram Today News- விழுப்புரம் மாவட்டம்,காணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவலர்கள் லட்சுமிபுரம் தென்பண்ணையாற்று அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காவலர்களை பார்த்ததும், அதில் வந்தவர்கள் சரக்கு வாகனத்தை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

இதையடுத்து அந்த சரக்கு வாகனங்களை பார்த்தபோது, அதில் மணல் கடத்தப்பட்டு வந்தது காவலர்களுக்கு தெரிந்தது.

இதையடுத்து அந்த வாகனங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தல் தொடர்பாக வேலாயுதம், முருகதாஸ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 6:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்