கரும்பு டிப்பர் சாய்ந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல்

X
சாலையில் கவிழ்ந்த கரும்பு ஏற்றி வந்த டிராக்டர்
By - P.Ponnusamy, Reporter |25 Jan 2022 3:30 PM IST
விழுப்புரம் அருகே கரும்பு ஏற்றி வந்த டிப்பர் டிராக்டர் சாலையில் சாய்ந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு இன்று தும்பூர் அருகே பம்பாதிரி பேட்டையில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் டிப்பர் வந்து கொண்டிருந்தது.
முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே கேட்டை அடுத்து உள்ள வேகத்தடையில் ஏற முடியாமல் டிப்பர் திடீரென கவிழ்ந்தது, அதில் டிப்பரில் இருந்த கரும்புகள் சாலையில் சரிந்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக மாறியது. நல்வாய்ப்பாக அப்போது அவ்வழியாக யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu