/* */

கள் இறக்க அனுமதி கேட்டு பனை மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கள் இறக்க அனுமதி கேட்டு பனை மரத்தில் ஏறி  ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கள் இறக்க தடையை நீக்கக்கோரி பனை மரத்தில் ஏறி நின்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லுசாமி தலைமையில் கள் இறக்கி விற்கும் உரிமை மீட்பு அறப்போராட்டம் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 50-வது நாளாக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூரி குடிசை கிராமத்தில் கள் இயக்கத்தோடு இணைந்து தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தீபன் தலைமையில் கள் இறக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பனை ஏறும் தொழிலாளர்கள் உரிய உபகரணங்களுடன் பனை மரத்தில் ஏறி நின்றும், தரையில் நின்றும் 85 ஆண்டு கால கள் இறக்க தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 க்கும் மேற்பட்ட பனை ஏறும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 March 2022 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...