/* */

ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சரி செய்ய கோரிக்கை

தொரவி அருகே ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சரி செய்ய கோரிக்கை
X

தொரவி அருகே மண் சரிந்து ஆபத்தான நிலையில் உள்ள சிறுபாலம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி, ஆவடையார்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வராக நதியின் குறுக்கே பாலம் கட்டி இரண்டு ஊராட்சிகளையும் இணைத்து போக்குவரத்து ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தது.

ஆனால் பாலத்தை இணைக்கும் சாலையில் அவசரத்தில் கட்டிய சிறு பாலங்கள் ஆங்காங்கே மண்சரிந்து, சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து உயிர் பலி ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே, விபத்துகள் ஏற்படும்முன்னர் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 28 Oct 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...