கெடார், கஞ்சனூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்: மின்வாரியம் தகவல்

கெடார், கஞ்சனூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்: மின்வாரியம் தகவல்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், கெடார், கஞ்சனூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மல்லிகைப்பட்டு, சங்கீதமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கெடார் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மல்லிகைப்பட்டு மின்னூட்டி, கஞ்சனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சங்கீதமங்கலம் மின்னூட்டி ஆகியவற்றில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர்திருக்கை, டட் நகர், கொண்டியாங்குப்பம், பள்ளியந்தூர், கோழிப்பட்டு, மல்லிகைப்பட்டு, மாம்பழப்பட்டு, கருங்காலிப்பட்டு, காங்கேயனூர், பொன்னன்குப்பம், நரசிங்கனூர், நேமூர், குன்னத்தூர், செ.புதூர், நங்காத்தூர், சங்கீதமங்கலம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai and future of education