/* */

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல் மூட்டைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, அவற்றில் திடீர் மழையால் நெல் மூட்டைகள் முளைத்து வீணாகிறது

HIGHLIGHTS

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல் மூட்டைகள்
X

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல் மூட்டைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் விவசாயிகளின் நெல் மூட்டைகளை நேரடியாக அரசு கொள்முதல் செய்யும் வகையில் மாவட்டத்தில் காணை, கல்பட்டு, கயத்தூர், உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து அதன் மூலம் விவசாயிகள் இடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது.

இந்நிலையில் கொள்முதல் செய்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் மாவட்ட சேமிப்பு கிடங்குகிற்கு எடுத்து செல்வதில் அரசு அதிகாரிகள் சுனக்கம் காட்டியதால் நெல் மூட்டைகள் அங்கேயே தங்கி பல நாட்கள் தேங்கி விடுகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் வைக்க இடமில்லாமல் அவதிப்படும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் மாவட்ட சேமிப்பு கிடங்குகிற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி திடீர் திடீரென பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது, இந்நிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக தினந்தோறும் திடீர் மழை பெய்து வருகிறது, இந்த மழையில் மாவட்டத்தில் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து தற்போது முளை விட்டு வீணாகி வருகிறது. இதனை தவிர்க்க தொடர்ந்து விவசாயிகள் விடுத்து வரும் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 6 July 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...