Begin typing your search above and press return to search.
தண்ணீரில் மூழ்கிய பயிர்களை எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்.
விக்கிரவாண்டி தொகுதியில் மழை வெள்ளநீரில் மூழ்கிய பயிர்களை எம்எல்ஏ புகழேந்தி நேரில் பார்வையிட்டார்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை எம்.எல்.ஏ புகழேந்தி நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது பேரூர் செயலாளர் நைனா முகமது, முன்னாள் நகர மன்ற தலைவர் அப்துல் சலாம், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாபுஜீவானந்தம், எத்திராஜன், யுவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.