பொது நீர்தேக்க தொட்டியில் அத்துமீறி தனிநபர் நினைவு உருவம்

பொது நீர்தேக்க தொட்டியில் அத்துமீறி தனிநபர் நினைவு உருவம்
X

பொது நீர்தேக்க தொட்டியில் வரையப்பட்ட தனிநபரின் உருவப் படம் அழிக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பு.

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் அத்துமீறி வைத்த இறந்தவர் உருவப் படத்தை அகற்ற கோரிக்கை

பொது நீர்தேக்க தொட்டியில் வரையப்பட்ட தனிநபரின் உருவப் படம் அழிக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பு.

அத்துமீறி அரசு பொது குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் வரைந்துள்ள இறந்தவர் உருவ படத்தை அழிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட காணைகுப்பம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான மேல்நிலைத் தொட்டி ஒன்று உள்ளது, இது அங்கு உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிக்கு பயன்படுத்தபட்டு வருகிறது, இந்நிலையில் அந்த குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இறந்தவர் ஒருவர் படம் வரையப்பட்டு உள்ளது. அவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி.

பொதுமக்கள் பயன்படுத்தும் மேல் நிலை குடிநீர் தொட்டியில் ஒரு தனிநபரின் அதுவும் இறந்த நபரின் படம் வரைவது மிகப்பெரிய தவறு. இதனை அப்பகுதி மக்கள் தட்டி கேட்டால் ஜாதி முறையை பயன்படுத்தி பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், அதனால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட துறையினரைஇந்த படத்தை அழிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது, இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
how ai is used in education