/* */

விழுப்புரம் அருகே இரு கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

விழுப்புரம் அருகே காணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு கோயில்களின் உண்டியலை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே இரு கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
X

பைல் படம்.

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் பூசாரியான அதே கிராமத்தை சேர்ந்த கணபதி (வயது 50) என்பவர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவில் பிரகாரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணமும் மற்றும் கோவிலில் இருந்த அரை கிலோ வெள்ளி அலங்கார பொருட்களும் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணம் மற்றும் அலங்கார பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அந்த உண்டியலில் காணிக்கை பணம் ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோல் வெண்மணியாத்தூர் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவிலிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த உண்டியலிலும் காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரிகள் கணபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 8 Sep 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?