/* */

100% வாக்கு பதிவு: குடுகுடுப்பை கலைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நேமூர் கிராமத்தில் நூறு சதவீத வாக்கு பதிவு வலியுறுத்தி குடுகுடுப்பை கலைஞர்கள் பிரச்சாரம்.

HIGHLIGHTS

100% வாக்கு பதிவு: குடுகுடுப்பை கலைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
X

ஜேஆர்சி சார்பில் குடுகுடுப்பை கலைஞர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்.

விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நூறு சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜேஆர்சி மாவட்ட கன்வீனர் ம.செல்லதுரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முட்டத்தூர் ஒய்காப் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒய்.ஜாக்குலின்ஆஸ்நாத் கலந்து கொண்டு 60 குடுகுடுப்பை கலைஞர்கள் கலந்து கொண்ட நூறு சதவீத வாக்கு பதிவு மற்றும் வாக்கு அளிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ஜேக்கப் ஜீவானந்தம், ஆட்சியர்கள் செல்வகுமார்,பிரேம், வினோத்,கிளமண்ட் ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் குடுகுடுப்பை கலைஞர் முனுசாமி தலைமையில் 60 குடுகுடுப்பை கலைஞர்கள் கலந்து கொண்டு நூறு சதவீத வாக்கு பதிவு மற்றும் வாக்கு அளிக்க உறுதிமொழி எடுத்துகொண்டனர். மேலும் பொதுமக்களிடம் தங்கள் குறிச்சொல்லும் ஸ்டைல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கல்வியறிவில் பின்தங்கிய குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த 60 கலைஞர்கள் வாக்களிப்பதின் அவசியம் மற்றும் நூறு சதவீத வாக்கு பதிவுஅவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Updated On: 31 March 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  4. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  5. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  7. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  8. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  9. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  10. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...