Begin typing your search above and press return to search.
வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள கமலாபுரத்தில் 'எம்-சாண்ட்' குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.அந்த மனுவில் கமலாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு தற்போது 'எம்-சாண்ட்' குவாரி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமம் முழுவதும் 'எம்-சாண்ட்' துகள்கள் படிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். எனவே, இங்கு 'எம்-சாண்ட்' குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.