விழுப்புரம் அருகே கொடுத்த கடன் திரும்ப வராததால் தற்கொலை

விழுப்புரம் அருகே கொடுத்த கடன் திரும்ப வராததால் தற்கொலை
X
விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் கொடுத்த கடன் திரும்ப வராததால் மனவேதனையில் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம்,கிளியனூர் அருகே உள்ள மொளம்பூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் வயது 50 என்பவர் தான் அதே பகுதியில் சிலரிடம் ரூ.4 லட்சம் வரை கடன் கொடுத்திருந்தாக தெரிகிறது.

அந்த ரூ.4 லட்சம் பணத்தையும் கடன் கொடுத்த நபர்களிடம் திருப்பி கொடுக்கும் படி கேட்டபோது அவர்கள் கொரோனாவால் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளனர்.

இதனால் மனவேதனையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare