/* */

ஊராட்சி துணைதலைவர் தேர்தலை சுதந்திரமாக நடத்த விழுப்புரம் ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம் முட்ராம்பட்டு ஊராட்சி துணை தலைவர் தேர்தலை பாதுகாப்புடன் நடத்த ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஊராட்சி துணைதலைவர் தேர்தலை சுதந்திரமாக நடத்த விழுப்புரம் ஆட்சியரிடம் மனு
X

விழுப்புரம் மாவட்டம் முட்ராம்பட்டி ஊராட்சி துணை தலைவர் தேர்தலை பாதுகாப்பாக நடத்தக்கோரி மன்ற உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டு ஊராட்சியில் துணை தலைவர் தேர்தல் நடத்த ஊராட்சி மன்ற உறுப்பினர் வீரப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டு ஊராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் 22.10.2021 அன்று நடைபெறாமல் நின்று விட்டது. முட்ராம்பட்டு ஊராட்சியில் மொத்தம் உள்ள 6 வார்டு உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக வீரப்பன் என்பவரை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க வாக்களிக்கச் சென்ற போது எங்கள் 4 நபர்களையும் வாக்களிக்க விடாமல்,

தேர்தலை முறையாக நடத்த விடாமல் தி.மு.க வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அவருக்கு சாதகமான வார்டு உறுப்பினரை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க வலியுறுத்தி பிரச்சனை செய்து தேர்தலை தடுத்து நிறுத்தி விட்டார். மீண்டும் வருகின்ற 29.11.2021 அன்று நடைபெற இருக்கும் முட்ராம்பட்டு கிராம ஊராட்சி மன்றத் துணை தலைவர் தேர்தலை ஆளுங்கட்சியின் தலையீடு மற்றும் அச்சுறுத்தல்இல்லாமல், எந்த வித முறைகேடும் நடைபெறாமல் நியாயமான முறையில்,சர்வ சுதந்திரமாக மறைமுக தேர்தலை உரிய போலீஸ் பாதுகாப்புடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Updated On: 22 Nov 2021 12:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!