/* */

டிசம்பர் 21 காத்திருப்பு போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு

வானூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் வரும் டிசம்பர் 21ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்நபோவதாக மாநாட்டில் முடிவு செய்தனர்.

HIGHLIGHTS

டிசம்பர் 21  காத்திருப்பு போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு
X

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின்  3வது வட்ட மாநாடு

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் 3 வது வட்ட மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு வட்ட தலைவர் ஆர.காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னதாக எல்.சரிதா அனைவரையும் வரவேற்று பேசினார், மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார், வட்ட செயலாளர் வேணுகோபால், மாவட்ட துணைச்செயலாளர் எம்.கே.முருகன் ஆகியோர் வேலை அறிக்கையை முன் வைத்து பேசினர்.

மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிபிஎம் வட்ட செயலாளர் ஜி.ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் வி.அர்ச்சுணன், தர்மபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூரான் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர், தொடர்ந்து ஆர்.காளிதாஸ் வட்ட தலைவராகவும், ஏ.வேணுகோபால் வட்ட செயலாளராகவும், எல்.சரிதா பொருளாளராகவும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் வரும் டிசம்பர் 21ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.

Updated On: 7 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...