/* */

கடன் வழங்காத கூட்டுறவு வங்கியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பயிர்க்கடன் வழங்காத கிளியனூர் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தை கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கடன் வழங்காத கூட்டுறவு வங்கியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
X

பயிர்கடன் வழங்காத கிளியனூர் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்காமல் அலைகழிக்கும், கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்து, கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் பயிர்க்கடன் வழங்காமல் அலைகழிக்கும் கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும், கடன் கேட்டு மனு கொடுத்துள்ள உள்ள எடசேரி,கொஞ்சி மங்கலம், கிளியனூர்,தைலாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்,

ஆர்ப்பாட்டத்தில் வட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.பாலமுருகன், ஐ .சேகர், ஆர்.சேகர், வி சுந்தரமூர்த்தி ஏ.அன்சாரி கே.மாயவன், ஆர்.விஸ்வநாதன், என்.அஸ்வத்தாமன், ஜே.முகமது அனாஸ், லலிதா உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?