/* */

கோட்டகுப்பம் அருகே சாலை விபத்தில் வங்கி ஊழியர் உயிரிழப்பு

கோட்டகுப்பம் அருகே வங்கி ஊழியர் சாலை விபத்தில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோட்டகுப்பம் அருகே சாலை விபத்தில் வங்கி ஊழியர் உயிரிழப்பு
X

பைல் படம்.

கோட்டக்குப்பத்தை அடுத்த இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (38). இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தாா். இவர் வழக்கம்போல் திங்கட்கிழமை, வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் கோட்டக்குப்பம் அருகே கோட்டைமேட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா். கோட்டைமேடு கிழக்கு கடற்கரை சாலையில் சந்திராயன்குப்பம் செல்லும் சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் சண்முகம் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்த சண்முகத்தை மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On: 23 Aug 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!