விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுக்கடங்காத கொரோனா பரவல்; பீதியில் மக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுக்கடங்காத கொரோனா பரவல்;  பீதியில் மக்கள்
X
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 532 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 27,788 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை189பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

வியாழக்கிழமை மட்டும் 382 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 24,096 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3503 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் இடமிலாமல் சிகிச்சைக்காக நோயாளிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story