/* */

காவல் நிலையத்தில் டிப்பர் திருட்டு: உரிமையாளர் புகாரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் நின்ற டிப்பரை காணவில்லை என புகார் கொடுத்ததால் பரபரப்பு

HIGHLIGHTS

காவல் நிலையத்தில் டிப்பர் திருட்டு: உரிமையாளர் புகாரால்  பரபரப்பு
X

காவல்நிலையத்தில் ட்ராக்டர் டிப்பர் காணவில்லை என உரிமையாளர் புகார் அளித்ததால் பரபரப்பு

காவல்நிலையத்தில் ட்ராக்டர் டிப்பர் காணவில்லை என உரிமையாளர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அந்த பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நடக்கும் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, டிராக்டர்கள், மாட்டுவண்டிகள், லாரிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு வருகினறன, அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி, இளந்துறை கிராமத்தை சேர்ந்த இயேசுஅடியான் மகன் அருள் (வயது 53) என்பவரின் டிராக்டர் டிப்பர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் பிடித்து, டிப்பருடன் ட்ராக்டரை பறிமுதல் செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அப்போது திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில், கடந்த 21-ந்தேதி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிராக்டர், டிப்பர் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்த்து வருவதற்காக அருள் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது, அங்கு அவரது டிராக்டர் மட்டுமே இருந்தது, அதனுடன் இருந்த டிப்பரை காணவில்லை.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்.

இது தொடர்பாக போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர் இது தொடர்பாக புகார் ஒன்றையும் அவர் காவல் நிலையத்தில் கொடுத்து உள்ளார். ஆனால், அதை போலீசார் வாங்காமல், 2 நாட்கள் காத்திருங்கள் என்று கூறி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ள நிலையில்

எனது டிராக்டர் டிப்பருடன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அங்கு டிப்பரை மட்டும் காணவில்லை. டிப்பரை யாருக்கோ விற்பனை செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதேபோன்று பலரது மாட்டுவண்டிகளும் காணாமல் போய் உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

காவல்துறையில் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த டிராக்டர் டிப்பர் திருடு போன சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டதா என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். எனவே இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மையில் டிராக்டர் டிப்பர் திருடு போனதா,அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மணல் திருட்டு சாராயம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் உதிரி பாகங்கள் களவு போய் வந்த நிலையில் தற்போது ஒரு டிப்பரையை காணவில்லை என்பது மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 Jan 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்